தலைவர் ஆட்டம் ஆரம்பம்…. ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் அனிருத், தலைவர் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியிருக்கிறார்.

ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! என்று கூறினார்.

இதற்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகிறார்கள். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்… #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!