தமிழ் சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்ப்பார்த்த ஒரு படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் கதை எழுதும் வேலையில் இயக்குனர் மணிரத்னம் பல வருடங்களாக செய்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.
கடந்த வருடம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தாய்லாந்தில் நடந்து வந்தது. அடுத்தடுத்து வேகமாக படப்பிடிப்பு நடக்க கொரோனா எல்லாவற்றையும் நிறுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் இப்பட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். வரும் ஜனவரி மாதம் 2021 ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!