குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு முதலில் வெளியேறப்போவது இவரா?

தமிழில் பிக்பாஸ் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து ஒரே சண்டைகள் தான் வீட்டில் அதிகம்.

இப்போது தான் பாலாஜி-கேட்ரியலா இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகின்றன. அடுத்தடுத்து கடுமையான டாஸ்குகள் பிக்பாஸால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் எந்த ஒரு எலிமினேஷனும் இல்லை, இந்த வாரம் கண்டிப்பாக இருக்கும், யாராவது ஒருவர் வெளியேறியே ஆக வேண்டும்.

ரேகா, சனம், ஷிவானி, ஆஜீத், கேப்ரியலா, ரம்யா பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் எலிமினேஷக்கு தேர்வாகியுள்ளவர்கள்.

இதில் நடிகை ரேகா குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாகவும் முதன்முதலாக வீட்டைவிட்டு அவர் தான் வெளியேறுகிறார் என செய்திகள் கூறப்படுகின்றன.

ஆனால் உண்மையில் யார் வெளியேறுகிறார் என்பதை நாளைய நிகழ்ச்சியில் காணலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!