பிக்பாஸ் சீசன் 4-ல் பெரிய மாற்றம்

ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பெரிய மாற்றம் நடைபெற இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னணி நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

கடந்த சீசன்-3ல் நாகார்ஜுனா சில காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் நிகழ்ச்சியை நடத்தினார்.

தற்போது சீசன் 4 துவங்கியுள்ள நிலையில், நாகார்ஜுனா நடித்து வரும் ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. அதில் அவர் கலந்து கொள்ள இருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு விடுப்பு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக வேறு யாரை தொகுத்து வழங்குவார்கள் என்று விரைவில் தெரியவரும்.

தமிழில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!