படமே ஓடவில்லை, ஆனால் சம்பளத்தை மட்டும் கோடிக்கணக்கில் உயர்த்திய நடிகர் சிம்பு.. எத்தனை கோடி தெரியுமா

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கொரோனா காரணமாக நின்று போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நவம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் துவங்குகிறது.

இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கி இருந்தார். இப்படத்திற்காக சுமார் 7 கோடி – 9 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் சிம்பு.

ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு திரையில் ஓடவில்லை.ஏன் இதற்கு முன்பு இவர் சோலோ ஹீரோவாக நடித்திருந்த ‘AAA’ படம் கூட மிகப்பெரிய தோல்வியடைந்தது. இந்நிலையில் மாநாடு படத்தை தொடர்ந்து சுசீந்திரன் படத்தின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் சிம்பு.

இப்படத்திற்காக சுமார் ரூ. 15 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம் நடிகர் சிம்பு. இதனால் இவரின் படமே ஓடவில்லை ஆனால் சம்பளத்தை மற்றும் இத்தனை கோடி உயர்த்தி இருக்கிறார் என பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!