அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ஷிவானி, அது நானில்லை… யாரும் நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார்.

சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள்.

தற்போது கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள இருக்கிறார். இதற்காக இவர் ஹோட்டலில் தனிமைப்படுத்த பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் நான் இல்லை… என் பெயரில் போலி கணக்கை யாரோ வைத்திருக்கிறார்கள். அதை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!