தன்னுடைய வாயினால் சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட நடிகை..!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!


நடிகர் தனுஷ்-ன் மரியான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பார்வதி மேனன். கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில், சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவமே கொடுக்கப்படுவது இல்லை என்பது போல் பேசினார் பார்வதி

அது மட்டுமின்றி, சமீபத்தில் மம்முட்டியின் கசபா படத்தை பார்த்ததாகவும் இவ்வளவு வயதான நடிகர் பெண்களை பற்றி அசிங்கமாக பேசியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.


இது போன்ற ஹீரோக்களை கொண்டாட வேண்டுமா.? என்று கேள்வி எழுப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இவரின் இந்த பேச்சால் கடுப்பான மம்முட்டி ரசிகர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் சுற்றிவழைத்து ஏகத்தும் கலாய்த்து தள்ளிவருகிறார்கள். அவர்களின் கிண்டலுக்கு பதிலளித்த பார்வதி, நான் கூறிய கருத்து சரியானது. அதற்காக நீங்கள் என்னை கலாய்த்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன் நல்லா கலாய்ங்க மம்முட்டி ரசிகர்களே என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!