சூர்யாவுக்கு சிறை தண்டனை கொடுங்க! பிரபல நடிகர் கொந்தளிப்பு – சர்ச்சையான பேச்சு

நீட் தேர்வு குறித்து அண்மையில் எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு அமோக ஆதரவுகள் பெருகினாலும் அக்கட்சியினர் சிலர் தரக்குறைவாக அவரை பேசி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த போதிலும் சூர்யாவின் மீது நடவடிக்கை தேவையில்லை என நீதிமன்றமே தீர்ப்பளித்தது.

ஆனால் BJP ஐ சேர்ந்த சிலர் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் அக்கட்சியின் உறுப்பினருமான ராதா ரவி சூர்யாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ராதா ரவி நீட் தேர்வு மட்டுமில்லாமல் பல விசயங்களில் அடிப்படை கூட தெரியாமல் சூர்யா பேசி வருகிறார். இப்படி விவரம் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!