இயக்குனர் பாலாவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.. எதற்காக தெரியுமா

தமிழ் திரையுலகில் சேது படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிக்வும் பிரபலமானவர் முன்னணி இயக்குனர் பாலா. இயக்குனராக மட்டுமல்லாமல் தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.

ஆம் இவர் தயாரிப்பில் இதுவரை மாயாவி, பரதேசி, பிசாசு உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார் பாலா. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் மற்றும் கதாநாயகியாக நடிகரோ பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்மகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வருகின்ற 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!