மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறி இருப்பவர் மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.

பிரபல குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் சூர்யா கிரண். இவர் பாண்டியன் ஸ்டோர் நடிகை சுஜிதாவின் சகோதரர். கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த கல்யாணியை இவர் திருமணம் செய்திருந்தார்.

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டியில், வாழ்க்கையில் வெற்றிகளையே பார்த்த பிறகு தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டை ஜப்தி பண்ணாங்க, காரை எடுத்துக்கிட்டாங்க. நடிகை கல்யாணியை பிரிந்ததற்கு காரணமும் கூட அதுதான். அப்போது எனக்கு விபத்தும் நேர்ந்தது. எல்லாம் கெட்ட நேரமும் ஒன்றாக வந்தது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!