தளபதி விஜய்யை கண்காணிக்கும் உளவுத்துறை!! தளபதி 65 குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தென்னிந்திய திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டு, அப்படத்தின் ரிலீஸிற்காக காத்துகொண்டு இருக்கிறார். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் தனது ராசி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் தனது படங்களில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக வசனங்களை முருகதாஸ் படங்களான கத்தி, சர்கார் உள்ளிட்ட படங்களில் பேசியுள்ளார்.

இதனால் மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் இந்த விஷயம் தளபதிக்கும் தெரிய வர, அடுத்து நடிக்கும் தளபதி 65 படத்தில் கண்ட படி இரண்டு அரசுகளையும் தாக்கி வசனம் எழுதி வைத்து இருந்தாராம் இயக்குனர் முருகதாஸ்.

இதை கேட்ட தளபதி மிரண்டு போய் அனைத்து வசனங்களையும் மாத்துங்க என கட்டளை இட்டுள்ளாராம். அதனால் தான் தளபதி 65 படத்தின் முறையான அறிவிப்பு வர தாமதமாகி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!