மறைந்த வடிவேலு பாலாஜிக்கு இதைவிட யாராலும் உதவ முடியாது- சூப்பர் விஷயம் செய்த சிவகார்த்திகேயன்.

நடிகர் என்பதை தாண்டி தனது குணத்தால் சக நடிகர்களின் மனதை கவர்ந்தவர் வடிவேலு பாலாஜி. 42 வயதான இவர் இன்னும் சினிமாவில் சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது.

ஆனால் அதற்குள் நம்மை எல்லாம் பிரிந்து சென்றுவிட்டார். மாரடைப்பு ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவு ஏகப்பட்ட கலைஞர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்ல கலைஞர், நல்ல மனிதர் என அவரை பற்றிய நினைவுகளை பிரபலங்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பாலாஜியின் மறைவால் துக்கத்தில் இருக்க அவரது குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்பதாக கூறியுள்ளார்.

சக கலைஞரை மதித்து சிவகார்த்திகேயன் கூறிய இந்த விஷயம் பலரையும் சந்தோஷம் அடைய வைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!