விஜய் தலைக்கனம் பிடித்தவர் என்று நினைத்தேன் – பிரபல நடிகை கூறிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் பெரிதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் அடுத்ததாக வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் தனது 65வது படத்தை நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வமாகவே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்யை பற்றி அவ்வப்போது அவருடன் இணைந்து நடித்த நடிகை அல்லது நடிகர்கள் அவரை பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்களை கூறுவார்கள்.

அந்த வகையில் தற்போது வேலாயுதம் படத்தில் விஜயுடன் இணைந்து அவருக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை சரண்யா விஜய்யை பற்றி சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

” தளபதி விஜயை நான் முதன் முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் நான் சிறுமியாக நடித்தபோது பார்த்தேன், அதன்பின் வேலாயுதம் படத்தில் பார்த்தபோது வித்யாசமே தெரியவில்லை ”

” நான் முதலில் அவரை பார்க்கும் பொழுது கொஞ்சம் தலைக்கனம் பிடிச்ச நடிகர் என்று தான் நினைத்தேன், ஆனால் அவர் செட்டில் இருக்கும் எல்லோருடனும் சகஜமாக தான் பழகுவார் ” என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!