பிரபல டிவியில் நடிகை லடசுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சொல்வதெல்லம் உண்மை. குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைக்கும் இந்த நிகழ்ச்சியால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் கூட ஒரு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் தான் நடுத்தெருவுக்கு வந்ததாக கூறி இருந்தார்.
இதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் தூக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இந்த நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் 1500வது எபிசோட் சமீபத்தில் நடந்தது. இதனை தொகுத்து வழங்கியவர் மதுரை ராமர்.
இது குறித்து அவர் கூறும்போது, இது ஒரு ஸ்பெஷல் எபிசோட் என்பதால் என்னை அழைத்து நடுவராக இருக்கும்படி கேட்டு கொண்டனர். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது கணவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நான் கேட்ட கேள்விக்கு முகம் சுழிக்காமல் பதில் அளித்தனர்.
முதன் முதலாக சந்தித்தபோது அவர் என்னை பாராட்டினார். நீங்கள் கலாய்த்தபோதுதான் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக்கை நான் அடிக்கடி பயன்படுத்தியது தெரியவந்தது என்றார்.
இந்த எபிசோட் முழுவதுமே ஒரு ஸ்கிரிப்ட்தான். அவர்கள் எழுதி கொடுத்ததைதான் நான் கேட்டேன். நான்தான் கேள்வி கேட்கிறேன் என்பது தெரியாமலேயே மக்கள் ரசித்தனர் என்றார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!