மாஸ் திரில்லர் கதைக்களத்தில் களமிறங்கும் பிக் பாஸ் ரைசா!! முழு விவரத்துடன் இதோ..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரைசா. இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது.

மேலும் இவர் பியார் பிரேமா காதல் படத்திற்கு முன்பே தனுஷ் நடிபில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தற்போது காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி இவரது நடிப்பில் திரில்லர் படம் ஒன்று உருவாகி வருகிறது.

ஆம் கார்த்திக் ராஜு இப்படத்தை இயக்குகிறார். கொரோனா தாக்கம் காரணமாக இவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கொரானா காலத்தில் மிகவும் நல்ல ஒரு திரில்லர் கதைக்களம் கொண்ட ஒரு கதையை தயார்செய்துள்ளராம்.

அதனை ‘சூர்ப்பனகை’ தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்து கூர உடனடியாக அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் கார்த்திக்.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிக் பாஸ் ரைசாவை இயக்குனர் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் ராஜு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!