சூர்யாவிடம் வேண்டுகோள் விடுத்த இயக்குனர் ஹரி- நடிகர் நிறைவேற்ற சாத்தியமா?

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து நடிகர்களின் படங்கள் எதுவும் திரையரங்கில் ஓடவில்லை. காரணம் அனைவரும் அறிந்தது தான் கொரோனா பயம்.

அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களின் வேலைகள் அப்படியே பாதியில் நிற்க. வரும் நாட்களில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று படம் திரையரங்கில் தான் வெளியாகும் என பலர் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் திடீரென சூர்யா வரும் அக்டோபர் 30ம் தேதி படம் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவித்துவிட்டார்.

அவரின் இந்த அறிவிப்புக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலருக்கு பிடிக்கவில்லை. அப்படி தான் இயக்குனர் ஹரி OTTயில் நீங்கள் இப்படத்தை வெளியிடுவது குறித்து மறு பரிசீலனை செய்யலாமே என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு சூர்யா என்ன கூறுவார், திரையரங்கில் இனி வெளியாவது சாத்தியமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!