பிக்பாஸ் 4-வது சீசனில் பங்கேற்கிறேனா? – நடிகை சுனைனா விளக்கம்

பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் பரவிய நிலையில், நடிகை சுனைனா அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

வழக்கமாக ஜூன், ஜுலை மாதங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தனர். ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அது திட்டமிட்டபடி தொடங்கப்பட வில்லை. வருகிற செப்டம்பர் மாதம் இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளர்களாக நடிகைகள் அதுல்யா, சுனைனா, ரம்யா பாண்டியன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக சமூக வலைதலங்களில் தகவல் பரவி வந்தது. இதையடுத்து ரசிகர்கள் பலர் அந்தந்த நடிகைகளிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், நடிகை சுனைனா பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரியாலிட்டி ஷோக்களில்பங்கேற்றால் என்னுடைய படங்களை யார் முடித்து கொடுப்பது என யோசிக்கிறேன். நான் எப்போது எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிலும் பங்குபெற விரும்பியதில்லை” என சுனைனா கூறியுள்ளார்.

இதேபோல் நடிகை ரம்யா பாண்டியனும் பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்பதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.