தல அஜித் தனது 50வது படமாக நடித்து வெளிவந்த மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் மங்காத்தா.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் மிகவும் மாஸான கதைகளதுடன் இருந்ததால் வசூலை அள்ளிக் கூவித்தது.
மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, மஹத், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு பிறகு மங்காத்தா 2 எப்போது வரும் என்று தான் தல அஜித்தின் ரசிகர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் தனது படங்களை பற்றியும், தல அஜித்தை பற்றியும் பல ஸ்வரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் ஒன்றாக : மங்காத்தா படம் நடந்ததற்கு காரணம் தல அஜித் தான். நான் தற்போது மாநாடு படத்தின் வேளையிலும், தல அஜித் அவருடைய வலிமை படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறோம்.
மேலும் இந்த கொரானா பிரச்சனை முதலில் முடிந்த பிறகு தற்போது உள்ள படங்களின் வெளியை முடிவுடன், தல அஜித் மனது வைத்தால் மங்காத்தா 2 கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!