ஓடிடி தளத்துக்கான படத்தில் நடிக்க பிரபல நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்

ஆடம் மெக்கே இயக்கத்தில் ஓடிடி தளத்துக்காக தயாராகி இருக்கும் ‘டோண்ட் லுக் அப்’ திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தன. இதனால் ஓடிடி தளங்களுக்கென பிரத்யேகமாக படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த படங்களையும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் எடுக்கிறார்கள்.

இதனால் ஓடிடி தளங்களுக்காக தயாராகும் படங்களில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, தற்போது ஓடிடி தளத்துக்காக தயாராகும் ‘டோண்ட் லுக் அப்’ படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிக்க அவருக்கு இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதில் ஹீரோயினாக நடிக்கும் ஜெனிபர் லாரன்சுக்கு ரூ.186 கோடி சம்பளம் கொடுத்துள்ளனர். ஆடம் மெக்கே இயக்கி உள்ள இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!