பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணைந்த பிரபல குழந்தை நட்சத்திரம், முக்கிய கதாபாத்திரமா?

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாத்துறையை சேர்ந்த பலரும் திரைப்படமாக முயற்சி செய்து வந்தனர்.

ஆனால் நீண்ட முயற்சிக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் தான் அந்த நாவலை பொன்னியின் செல்வன் என்ற பெயரில் உருவாக்கி வருகிறார்.

அப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு மற்றும் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது, மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லந்தில் நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து கொரோனா காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை மீண்டும் துவங்க உள்ளதாகவும்.

சென்னையில் இதற்காக செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் கூறபடுகிறது.

இதனிடையே இப்படத்தில் பிரபல குழந்தை நட்சத்திரமான பேபி சாரா இணையவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தின் குழந்தை பகுதியில் நடிக்க தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!