இயக்குனர் அட்லியின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா? இதோ..

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் இயக்குனர் அட்லீ என்பதனை நாம் அறிவோம்.

இவர் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் என பல பரபலங்களை வைத்து தனது முதல் படமான ராஜா ராணி படத்தை இயக்கினார்.

இதன்பின் யாரும் கொஞ்சம் கூட எதிர்பாராத விதத்தில் தளபதி விஜய்யுடன் தெறி படத்தின் மூலம் மாஸ் கூட்டணி அமைத்தார்.

இதனை தொடர்ந்து மெர்சல், பிகில் என வெற்றி படங்களை கொடுத்து வசூல் வேட்டையை நடத்தி வந்தார்.

மேலும் இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக் கானுடன் முதல் முறையாக இணைந்து படம் எடுக்க போவதாக பல தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்க போகிறாராம் அட்லீ. மேலும் அவருக்கு ஒரு கதையும் கூறியுள்ளாராம்.

ஆம் தற்போது தமிழ் திறையிலகில் நல்ல வசூல் மார்கெட் வைத்திருப்பவர் ஜெயம் ரவி என்பதால் அவருடன் கூட்டணி அமைக்க போகிறாராம்.

அதோடு ஒரு சிலர் அட்லீ இயக்கப்போவதில்லை, ஜெயம் ரவி படத்தை தயாரிக்க தான் போகிறார் என்றும் செய்திகள் வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!