ஷாம் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதை தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்தவர்.
அதோடு இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே போன்ற பல நல்ல படங்களில் நடித்தவர்.
அது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலுன் ஒரு சில முன்னணி நடிகர்களின் படத்தில் செகண்ட் ஹீரோவாக தலையை காட்டினார்.
மேலும், தன் முகத்தை வருத்தி அவர் நடித்த 6 மெழுகுவத்திகள் படத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.
தற்போது கூட உள்ளம் கேட்குமே இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று ஷாம் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது என்று கூறப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷாம் உள்பட 13பேர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை எனவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யுடியூப் சேனலில் பல மாதங்களுக்கு முன்பே இதுக்குறித்து பேசியுள்ளார்.
அதோடு ஷாமை போலிஸாரிடம் போட்டுக்கொடுத்தது ஒரு பிரபல நடிகர் தான்.
அவர் அந்த சூதாட்ட விடுதியில் நிறைய பணத்தை விட்டுள்ளாராம்.
அந்த கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் போலிஸார் காதில் இந்த செய்தியை போட்டு வைத்தாராம்.
இதுவே ஷாம் பிடிப்பட முக்கிய காரணம் என்று தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது அந்த பிரபல ஹீரோ யார் என்பது தான் எல்லோருடைய கேள்வியும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!