கொரோனாவைவிட பெரிய கஷ்டங்களை பார்த்துவிட்டேன் – மனிஷா கொய்ராலா

கொரோனாவைவிட பெரிய கஷ்டங்களை எனது வாழ்க்கையில் பார்த்துவிட்டேன் என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2010-ல் சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “கொரோனாவால் நாட்டில் நிலவும் சூழல் என்னை பயமுறுத்தவில்லை. இதைவிட மோசமான புயல்கள், ஏற்கனவே எனது வாழ்க்கையில் வீசியுள்ளன. அதோடு ஒப்பிடும்போது கொரோனா எனக்கு சாதாரணமாகவே தெரிகிறது. வழக்கம்போல் அமைதியாகவே இருக்கிறேன். யோகா, தியானம் செய்கிறேன்.

இயற்கையோடு உரையாடுகிறேன். செடிகளுடனும், எனது பெற்றோர்களுடனும் நேரத்தை செலவிடுகிறேன். மும்பையில் பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பறவைகள் சத்தம் கேட்கிறது. இதற்கு முன்பு இந்தமாதிரி அமைதியான சூழலை நான் கண்டதில்லை. மீண்டும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் இல்லை. நோய் பாதிப்புக்கு பின் தனியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.” இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!