வனிதாவோ, லட்சுமியோ நமக்கு படியளக்க போறதில்லை! காசு பாக்குறாங்க! இளம் நடிகர் அதிரடி எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக வனிதா பீட்டர் பால் திருமண சர்ச்சை கார சாரமான விவாதமாக சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருந்தது. இவ்விசயத்தில் பலருக்கும் ஊடகங்கள் மீது அதிருப்தியே நிலவியது.

வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன், சூரியா தேவி சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்க பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே பலரின் மனநிலை.

வனிதாவின் மீது ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்வதும், வனிதா மரியாதை குறைவாக மற்றவர்களை பேசுவதும் பெரும் சர்ச்சையாக மோதல் முற்றியது.

இந்நிலையில் இளம் நடிகரும், சமூக சேவகருமான மதுரை அபிசரவணன் இவ்விசயத்தில் திருமதி வனிதாவோ…

திருமதி லட்சுமியோ உங்களுக்கு படியளக்க போவதில்லை…

நீங்கள உழைத்தால் தான் உங்கள் குடும்பத்தில் உணவு உண்ண முடியும்…

உழைச்சு தான் அன்றாடம் ஓட்டணும் என்கிற வர்க்கம் உழைத்துக்கொண்டே தான் இருக்கிறது…

உட்காந்தாலும் சோறு வரும் எற்ற வர்க்கம்தான் அடுத்தவர் அந்தரங்கத்தில் தலையை நுழைக்கிறது..

அவர்கள் சண்டையை நீங்கள் பார்ப்பதாலும் பகிர்வதாலும் ஒருசில யூடியூப் மற்றும் வெப்டைட் காசு பார்த்து கொண்டிருக்கிறார்கள்..

தயவுசெய்து நமக்கு தேவையில்லாத அடுத்தவர் அந்தரங்கத்தில் நுழைவது அநாகரீகம்…

ஒருவேளை அவர்தம் சொந்த பிரச்சினையை பொதுவெளியில் பேசினாலும் அது அவரது விசயம்…

நாம் நமது பணியை மட்டும் பார்ப்போம்… தயவுசெய்து இதை பகிராதீர்கள் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

இனி யாராவது பகிர்ந்தால் எனது நட்பிலிருந்து நீக்கபடுவார்கள். என எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!