வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை! மருத்துவர்கள் கூறிய ரிப்போர்ட் – நடிகருக்கு நேர்ந்ததென்ன?

கடந்த ஜூன் 14 ம் தேதியன்று, சினிமா வட்டாரம், ரசிகர்கள், ரசிகைகளை அதிர்ச்சியாக்கிய செய்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என்றே சொல்லலாம்.

அவரின் மரணம் குறித்து கொலை, தற்கொலை என பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவரின் உடல் பிரேத பரிசோதனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

ஐந்து மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் சுஷாந்தின் உடலில் மரணத்திற்கு முன் ஏதாவது போராட்டங்கள் நடந்ததற்கான அறிகுறிகளோ, காயங்களோ தென்படவில்லை. அவரின் விரல் நகங்களில் இருந்து சதைத்துணுக்கு உள்ளிட்ட எந்த விதமான பொருட்களும் கிடைக்கவில்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தூக்கிட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் தான் அவரின் மரணத்திற்கான முக்கியமான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரின் இறப்பு எந்த விதமான சந்தேகங்களும் அற்ற தற்கொலை தான் என உறுதியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!