சிம்புவால் கைவிடப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம், வெளியான மாஸ் தகவல்..

நடிகர் சிம்பு தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெளியானது.

அதனை தொடர்ந்து கன்னட மொழி திரைப்படமான முஃப்டி திரைப்படத்தில் நடித்து வந்த சிம்பு பின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அப்படம் கைவிடப்பட்டது.

அதன்பின் நடிகை ஹன்ஷிகா உடன் மகா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுடனான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு, முஃப்டி திரைப்படத்தின் ரீமேக்கை மீண்டும் துவங்க இருப்பதாக கூறபடுகிறது.

மேலும் இப்படத்தில் நடிகர் சிம்பு உடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!