முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிப்பது ஏன்? – சசிகுமார் விளக்கம்

முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகர் சசிகுமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சின்ன வயசுல இருந்தே பாக்யராஜ் சாரின் படங்கள் பார்த்துப் பழகினவன் நான். அவரோட மூணு படங்கள் எப்பவும் எனக்கு ஆல்டைம் ஃபேவரிட். அதுல ஒண்ணு ‘முந்தானை முடிச்சு.’

இந்த நேரத்துல தான் தயாரிப்பாளர் ஜேஎஸ்பி.சதீஷூக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கு. அப்போ தான் பாக்யராஜ் சாரை நேர்ல மீட் பண்ணிப் பேசினோம். அவரும் உடனே, ஓகே சொல்லிட்டார். ‘முந்தானை முடிச்சு’ படத்தை அப்படியே ரீமேக் பண்றோம். அதனால, சார் பண்ணுன வாத்தியார் கேரக்டர்ல நான் நடிக்குறேன்.

இப்போ இருக்குற யங் ஜெனரே‌ஷன் யாரும் இந்தப் படத்தைப் பார்த்து இருப்பாங்களானு தெரியல. அதனால, இப்போ இருக்குற பசங்களும் ரசிக்கிற மாதிரி படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கோம். தவிர இது ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்தான் பார்ட் 2 இல்லை. அதனால படத்தோட டைட்டிலும் ‘முந்தானை முடிச்சு’தான். இதைவிட பொருத்தமான டைட்டில் இந்தப் படத்துக்குக் கிடைக்காது.’ இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!