வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா…. காரணம் இதுதான்

நடிகரும், இயக்குனருமான பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் அவரது இல்லத்தில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் சென்னையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

அந்த வகையில், இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லிநகரத்துக்கு அனுமதி பெற்று சென்றுள்ளார். மாவட்ட எல்லையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லாததால், அவரை ஊருக்கு செல்ல அனுமதித்தனர். இருப்பினும் கொரோனா அதிகம் பாதித்துள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து அவர் வந்துள்ளதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!