பேஸ்புக்கில் நிதி திரட்டும் ஜிவி பிரகாஷ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ ஜிவி பிரகாஷ், பேஸ்புக்கில் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்கர்களிடம் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் சில தினங்களுக்கு முன்பு யூடியூப்பில் ரசிகர்களுடன் உரையாடி, அவர்கள் விரும்பி கேட்ட பாடல்களை பாடி அசத்தினார்.

தற்போது பேஸ்புக் மூலமாக ரசிகர்களுடன் உரையாட இருக்கிறார். பேஸ்புக் பக்கத்தில் மே 1ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டு உரையாட இருக்கிறார். இதன் மூலம் வரும் வருமானத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ இருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!