நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், மேலும் சினிமாவை தாண்டி சமூகத்திற்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவரின் மனைவி நடிகை ஜோதிகா கோவிலுக்கு எவ்வளவோ பணம் கொடுக்கிறோம், அதில் கொஞ்சம் பள்ளிகள் கட்டுவதற்கு கொடுக்கலாம் என கூறினார்.
மேலும் இது மிக பெரிய சர்ச்சையாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சூர்யா அன்பை விதைப்போம் என ஒரு அறிக்கையை வெளியிட்டுயிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி “சிறப்பு” என ட்வீட் செய்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!