ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி செய்து கொடுக்கும் இமான் அண்ணாச்சி

தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இமான் அண்ணாச்சி ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி செய்து கொடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி ஏழைகளுக்கு தானே பிரியாணி சமைத்துக் கொடுக்கும் காணொளி வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், தெருவோரத்தில் வசிக்கும் மக்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறான மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இமான் அண்ணாச்சி தானே பிரியாணி செய்து, சென்னையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!