ஆஸ்கார் விருது வென்ற பாராசைட் திரைப்படத்தை மோசமாக விமர்சனம் செய்த இயக்குனர் ராஜமௌலி!

பிரம்மாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலி தற்போது இந்திய அளவில் அறியப்படும் மிக பெரிய இயக்குனர் ஆகிவிட்டார்.

இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் மூலம் உலக அளவில் பேமஸ் ஆகினார்.

தற்போது நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண்னை வைத்து ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலியிடம் நேரலை பேட்டி ஒன்றில் ஆஸ்கார் விருது வென்ற பாராசைட் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “படம் ஆரமபத்தில் மிகவும் ஸ்லோவ்வாக தான் இருந்தது, அதனால் நான் தூங்கிவிட்டேன் மீதி கதையை எனது மனைவியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

மேலும் இந்த படம் எதிர்பார்த்த அளவு உற்சாகமாக இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!