கொரோனா ஊரடங்கால் திருமணத்தை ஒத்திவைத்த நடிகர்

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிரபல நடிகர் தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ளார்.

பிரபல கன்னட சினிமா நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி. இவர், ‘பஞ்சதந்திரா, பர்ஜரி, கோடிகொப்பா-3’ உள்பட 30 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களது திருமணம் மே மாதம் 17-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி தனது திருமணத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!