நடிகர் சங்கத்துக்கு உதவிய விவேக்

நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கு விவேக் பணமும், அரிசியும் வழங்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர்-நடிகைககள் பலர் நிதி மற்றும் அரிசி வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விவேக் நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கு ரூ.3.5 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் 100 மூட்டை அரிசியும் வழங்குகிறார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு நலிந்த நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கி உள்ளார். உதவி பொருட்களை அவர் நேரில் வழங்கினார்.

இதுபோல் நடிகர் பசுபதி, நடிகை குட்டி பத்மினி ஆகியோரும் தலா ரூ.15 ஆயிரம் நிதி வழங்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் 2 ஆயிரம் பேர் வங்கி கணக்கில் தலா ரூ.500 போடப்பட்டு உள்ளதாக நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!