ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கும் போதிய அளவில் முக கவசங்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 200 முக கவசங்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேற்று நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முக கவசங்களை வழங்கினார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உடன் இருந்தார். விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!