தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கும்.
அப்படி முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்கு சினிமா ரீதியாகவும் ரசிகர்கள் ரீதியாகவும் போட்டி நிலவினாலும், அவர்கள் எப்போதும் நட்பாக தான் பேசிவருவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அந்தந்த காலகட்டத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் மிக பெரிய அளவில் கொண்டாட படுவார்கள்.
ரஜினி – கமல்
விஜய் – அஜித்
தனுஷ் – சிம்பு
போன்ற நடிகர்கள் அந்தந்த காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகர்கள்.
இந்நிலையில் இவர்களில் தனது சக கலைஞர்களை போட்டியாக பார்க்காமல் அவர்களை மதித்து பொது இடத்தில் பாராட்டி பேசியுள்ளார்கள்.
நடிகர் ரஜினி “கமல் இல்லையென்றால் நான் இந்த இடத்தில் இல்லை” என கூறியுள்ளார். நடிகர் விஜய் “நண்பர் அஜித் மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்தேன்”, நடிகர் தனுஷ் “சிம்பு சினிமாவிற்காகவே பிறந்தவர்” என கூறியுள்ளார்கள்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!