லோகேஷ் கனகராஜ் உட்பட 10 இயக்குனர்களிடம் கதை கேட்ட சிம்பு..? யார் யார் தெரியுமா

டி. ராஜேந்தர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு.

இதன்பின், பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தார் சிம்பு.

இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு மிக சிறந்த முறையில் பூஜையுடன் துவங்கியது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து சிம்பு யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை குறித்து தற்போது சிம்பு வரிசையாக பல இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது யார் யார் என்பதனை தற்போது பார்ப்போம் :

1. மிஸ்கின் :

இயக்குனர் மிஸ்கின் அவர்களிடம் ஏற்கனவே சிம்பு கதை கேட்டதாக தகவல்கள் வெளியானது.

2. சீமான் :

இவர் தற்போது சிம்புவிடம் கதை கூறியுள்ளதாக தெரிவந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சில புகைப்படங்கள் கூட இதற்கு காரணமாக இருக்க கூடும்.

3. சேரன் :

இதனை பற்றி ஏற்கனவே கூறி இருந்தபடி விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் சிம்பு இணைந்து நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

4. அமீர் :

தற்போது இவரும் சிம்புவுக்கு கதை கூறியிருப்பதாக தெரிவந்துள்ளது.

5. இலன் :

இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கியவர்.

6. சுதா கொங்கரா :

ஒரு கதையை சிம்புக்காக இயக்குனர் சுதா அவர்கள் தேர்வு செய்து வைத்துள்ளதாக சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

7. லிங்குசாமி :

தற்போது இவரும் சிம்புவுக்கு கதை கூறியிருப்பதாக தெரிவந்துள்ளது.

10. கௌதம் மேனன் :

ஆம் இது அனைவரும் அறிந்த படி விண்ணைத்தாண்டி வருவாயா 2 தான்.

9. மகிழ் திருமேனி :

தடம் என்று மிக பெரிய வெற்றியை தமிழ் திரையுலகிற்கு தந்த ஓர் இயக்குனர். இவர் சிம்புப்பிற்கு கதை கூறியுள்ளதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

8. ஐக் ராதா :

இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற எனும் படத்தை இயக்கிய இயக்குனர்.

11. விஜய் சந்தர் :

இதற்கு முன் சிம்புவை வைத்து வாலு எனும் திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தவர்.

12. கார்த்திக் நரேன் :

தற்போது நடிகர் தனுஷுக்கும் கதை கூறி ஓகே செய்த கார்த்திக் நரேன் சிம்புவிடமும் கதை கூறியிருப்பதாக தெரிவந்துள்ளது.

13. லோகேஷ் கனகராஜ் : ஆம் இது தான் மிக பெரிய திருப்புமுனை. லோகேஷ் இதற்கு முன்பு கமல் தயாரிப்பில் சிம்புக்கு தான் படம் பண்ணுவதாக இருந்ததாம். ஆனால், இதனிடையே சூப்பர் ஸ்டார் அவர்களின் கதை வந்தால் தான் சிம்புவிடம் கூறிய கதை தள்ளி போய் கொண்டு இருப்பதாக தெரிவந்துள்ளது.

மேலும் இதனை குறித்து நடிகர் சிம்புவே கூடிய விரைவில் நான் அடுத்து என்ன படம் பண்ண போகிறேன் அது யாருடைய இயக்கத்தில் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!