வெங்கட் பிரபுவை தொடர்ந்து முன்னணி இயக்குனருடன் இணையும் சிம்பு? யார் தெரியுமா

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் முழு மூச்சாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நன்றாக துவங்கியது.

இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ், எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

நடிகர் சிம்பு இப்படத்திற்கு பிறகு எந்த படத்தில்யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனை குறித்து தற்போது சிம்பு அடுத்ததாக முன்னணி இயக்குனர் மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இந்த விஷயத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!