விபத்திற்கு காரணமானவர் கைது! கமல்ஹாசன், இயக்குனர் சங்கருக்கு சம்மன்

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று முன் தினம் இரவு ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்ததில் 3 பேர் பலியாகினர். 10 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக கிரேன் ஆப்ரேட்டரின் தவறான இயக்கமே விபத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதே வேளையில் தயாரிப்புகுழுவின் செயல்பாடுகளே காரணம் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

தற்போது கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளாராம். மேலும் கமல்ஹாசன், இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்ப காவல் துறை முடிவு செய்துள்ளாராம்.காயமடைந்தவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

அத்துடன் கேமிரா மேனுக்கும் சம்மன் அனுப்படும் என தெரிகிறது. இதுக்குறித்து பல விவரங்களை மேலும் சினிஉலகம் பக்கத்தில் விரிவாக தெரிவிக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!