டுவிட்டர் சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி முதன்முறையாக விளக்கம்- என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர்களை பற்றி சர்ச்சைகள் வருவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. சிலர் அப்படிபட்ட செய்திகளுக்காக பதில் கொடுப்பர், இதற்கெல்லாம் பதில் கூற முடியாது என சில நடிகர்கள் இருப்பர்.

அப்படி நடிகர் விஜய் சேதுபதி குறித்து ஒரு சர்ச்சை எழும்பியது, அதற்கு அவர் கூலாக அந்த சர்ச்சையை பதிவு செய்து, வேறு வேலை ஏதாவது இருந்தால் போய் பாருங்க என டுவிட் செய்திருந்தார்.

அந்த டுவிட் மக்களிடம் மிகவும் வைரலானது. இந்த நிலையில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம் டுவிட் குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், அது பேசி முடித்துவிட்டேன், தயவுசெய்து வேண்டாம், எல்லாம் சேர்த்துத்தானே போட்டிருந்தேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!