சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரைப்படங்களுக்கு சினிமா பைனான்சியராக இருந்து வருபவர் அன்புச்செழியன். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு சென்னையிலும் வீடு உள்ளது. இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வருமான வரித்துறையினர் இன்று திடீரென சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அவர் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் தங்கமகன், ஆண்டவன் கட்டளை, மருது மற்றும் வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார். சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாக பைனான்சியராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வருமான வரித்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!