தளபதி ரசிகர்களை திட்டிய தயாரிப்பாளர்..!! எதற்காக தெரியுமா..?


தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக கருத்து ஒன்றை கூறியுள்ளார். இது, நடிகர் விஜயின் மெர்சல் மற்றும் விஜய் ரசிகர்களை பற்றித்தான் என கூறுகிறார்கள்.இவர் கூறியுள்ள கருத்து நெட்டிசன்களையும், குறிப்பாக விஜய் ரசிகர்களையும் உன்னிப்பாக கவனிக்க செய்துள்ளது.

அவர் கூறியுள்ளதாவது,

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


சில அரைவேக்காடு ட்ராக்கர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு படத்தின் வசூலை தவறாக வெளியிடுகிறார்கள். உங்களுக்கு நீங்கள் விரும்பும் நடிகரின் திரைப்படம் பிடித்திருந்தால் கொண்டாடுங்கள். அதை விட்டுவிட்டு வசூலை பற்றி ஏன் பேசுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு வசூல் ஆனது என்று எப்படி தெரியும். ஒரே எரிச்சலா இருக்கு..! அதை பற்றி உங்களுக்கென்ன கவலை. ச்ச..! என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய் ரசிகர்கள் உட்பட நீங்கள் சொல்வது சரிதான். படம் நன்றாக இருந்தால் போதும். அந்த படம் எவ்வளவு வசூல் செய்தால் நமெக்கென்ன..! நாம் படத்தையும், நமக்கு பிடித்த நடிகரை மட்டும் கொண்டாடுவோம்..! என்று கருத்து கூறி வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!