சிவாஜிக்கு பிறகு தமிழ் திரையுலகில் இந்த முன்னணி நடிகர் தான்- எஸ்.தாணு ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் நடிப்பு என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் தான்.

இன்று அசுரன் படத்தின் 100வது நாள் சிறப்பு விழா நடந்து முடிந்தது. இதில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் எஸ். தாணு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய எஸ். தாணு “சிவாஜி அவர்கள் மட்டும் உயிரோடு இருந்தால் அவரை இந்த விழாவிற்கு அழைத்து வந்திருப்பேன், சிவாஜி அவர்களுக்கு பிறகு எல்லா கதாபாத்திரத்தையும் எடுத்து நடிப்பது நடிகர் தனுஷ் தான் என்று கூறினார்.

மேலும் கேரளாவில் உள்ள இயக்குனர் ஒருவர் இந்த படத்தை பார்த்து விட்டு இந்த சிவசாமி கதாபாத்திரத்தை நடிகர் தனுஷால் மட்டும் தான் நடிக்க முடியும் என்று வெளிப்படையாக கூறினார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!