இப்போதே தெறிக்கவிடும் விஜய்யின் மாஸ்டர் தகவல்- இதுவேற லெவல்

தளபதி கர்நாடகாவில் உள்ளார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக அவரை காண ஆஜராகி இருந்தனர், அதை நாமும் வீடியோக்கள் மூலம் பார்த்தோம்.

இப்போது படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் என்ன விஷயம் என்றால் படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் விநியோகம் பல இடங்களில் முடிந்துள்ளது.

கோயம்புத்தூர், நார்த் மற்றும் சவுத் ஆற்காடு மற்றும் மதுரை ஆகிய 5 ஏரியாக்களிலும் ஃபைவ் ஸ்டார் செந்தில் உரிமையை பெற்றுள்ளாராம்.

திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாக்களில் கார்த்திக் என்பவரும், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாக்களில் முத்துகனி என்பவரும் பெற்றுள்ளனராம்.

சென்னை மற்றும் செங்கல்பட்டில் மட்டும் இன்னும் விற்கப்படவில்லையாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!