ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது: போர்டு வைத்த பெட்டிக்கடைக்காரர்

ரஜினி கட்சி
அரசியல் கட்சி துவங்குகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டே இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. தமிழக சட்டசபை தேர்தல் தான் அவரின் இலக்கு. அதற்கு இன்னும் காலம் இருப்பதால் அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அடுத்தடுத்து புதுப்படங்களை ஒப்புக் கொள்வதால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அரசியல்
ரஜினி கட்சி துவங்கும் முன்பே அவரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று விமர்சனம் எழுந்துள்ளது. அவர் கட்சி பெயரை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் அரசியலுக்கே வர மாட்டார் என்றே பலரும் நம்புகிறார்கள். ஏன் அவருக்கு நெருக்கமான சிலரோ ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்கிறார்கள்.

கடன் கிடையாது
ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஏற்கனவே பலர் மீம்ஸ் போட்டுவிட்டனர், போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் இந்த ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடன் கொடுக்க விரும்பாத கடைக்காரர் ஒருவர், ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ரஜினி கட்சி துவங்கவே மாட்டார். அதனால் எப்பொழுதுமே கடன் கிடையாது என்பதை அந்த நபர் என்ன அழகாக தெரிவித்துவிட்டார் என்கிறார்கள் நெட்டிசன்கள். மேலும் ரஜினியே அந்த கடைக்காரரிடம் அறிவுரை கேட்டாலும் கேட்கலாம் என்று கலாய்க்கிறார்கள். நெட்டிசன்கள் கலாய்ப்பது ரஜினிக்கு தெரியாமல் இல்லை. சரியான நேரத்தில் தனது செயல் மூலம் பதில் அளிப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!