அரசியல் வேண்டாம்னு ‘அவர்’ சொன்னார் நான் கேட்கல: ரஜினி ஓபன் டாக்

தர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினி அரசியல்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவர் ரசிகர்களின் நீண்ட கால ஆசையாகும். இந்நிலையில் தான் கட்சி துவங்குகிறேன், 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தர்பார் ட்ரெய்லர்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் அவர் தன் அரசியல் வருகை பற்றி பேசியுள்ளார். ரஜினி கூறியதாவது, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் எனக்கு படத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். எனக்கு 60 வயதானபோது அவர்(தான் பின்பற்றும் 3 விஷயங்கள்) எனக்கு மூன்று அறிவரை வழங்கினார் என்றார் ரஜினி.

அமிதாப் அறிவுரை
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களை பிசியாக வைத்துக் கொள்ளுங்கள். சும்மா இல்லாமல் எது விருப்பமோ அதை செய்யுங்கள். அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை கண்டுகொள்ள வேண்டாம். அசியலுக்கு வர வேண்டாம் என்று அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கினார். அவரின் 2 அறிவுரைகளை நான் பின்பற்றுகிறேன். ஆனால் மூன்றாவது அறிவுரையை சந்தர்ப்ப சூழலால் பின்பற்ற முடியவில்லை என்று ரஜினி தெரிவித்தார்.

வருவாரா, மாட்டாரா?
ரஜினி தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்கிற பேச்சு கிளம்பியுள்ளது. அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டே இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் அவர் நிச்சயம் கட்சி துவங்க மாட்டார் என்று விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் தான் ரஜினி தர்பார் விழாவில் அரசியல் குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!