கர்ப்பிணிக்கு வளைகாப்பு….. ரசிகையை நெகிழவைத்த ரஜினி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தன்னை காண வந்த கர்ப்பிணி ரசிகை ஒருவருக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தம்பதிகள் ராகவா விக்னேஷ் – ஜெகதீஸ்வரி. இவர்கள் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாவர். ஜெகதீஸ்வரி கர்ப்பமாக இருந்து உள்ளார். கர்ப்பமாக இருந்த மனைவியிடம், அவரது ஆசை குறித்து ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

4-வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்கு நேரம் கேட்க ராகவா விக்னேஷ் முயன்றுள்ளார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய படப்பிடிப்பு நடந்து வரும் தளத்துக்கு தம்பதியரை வரவழைத்து சந்தித்துள்ளார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரிக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!