இந்தக் காரணத்துக்காக சமூகவலைத்தளங்களிலிருந்து விலகினார் பிரபல இயக்குநர்

தன்னுடைய கருத்துகளை ஒரு தாளில் எழுதி அதைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார் பிரபல இயக்குநர் சுசீந்திரன். இந்நிலையில் திடீரென அவர் சமூகவலைத்தளங்களிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: அனைவருக்கும் வணக்கம். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய எனது சமூகவலைத்தளத்திலிருந்து வேலைப்பளு காரணத்துக்காக விலகிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கியுள்ள சாம்பியன் படம் டிசம்பர் 13 அன்று வெளிவரவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!