அரசியல்வாதியாக களமிறங்கிய அமீர்

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அமீர், அடுத்ததாக அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார்.

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் அமீர். இவர் யோகி படம் மூலம் நடிகராக பெயர் பெற்றார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார்.

தற்போது இவர் நாற்காலி என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வி.இசட்.துரை இயக்கும் இப்படத்தை மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிக்கிறார். அரசியல்வாதியாக அமீர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!