விருப்பம் இல்லாமல் நடிக்க வந்தேன் – பாரதிராஜா

பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, பட விழாவில் பேசும்போது, விருப்பம் இல்லாமல் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை மக்களின் வாழ்வியலை கலந்து சாம்பியன் படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன்.

விஷ்வா நாயகனாக அறிமுகமாகிறார். மிருணாளினி, சவுமிகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டில் பாரதிராஜா பேசும்போது, ‘சுசீந்தரன் எனக்கு பிடித்த கலைஞன். பாண்டிய நாடு படத்தில் முதலில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்ப போய் ஏன் நடிச்சுகிட்டுனு நினைச்சேன். ஆனால் அது எனக்கு ஒரு கம்பேக்காக இருந்தது.

சுசீந்திரன் படம் எல்லாமே நல்லாத்தான் இருக்கும். சாம்பியன் திரைப்படம் அவனுக்கு இன்னொரு மகுடமாக இருக்கும்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!